கண் விழிக்க,
கூசும் விளக்குகள் கீழ்
படுத்திருந்தேன் ...
சுமோ என் மீது
மோதியதாக ஞாபகம்//
மருத்துவர்கள் அவர்களுக்குள்
பேசி கொண்டதை நான் கேட்டேன்//
அவசரமாக எனது உறுப்புகளை
விலை பேசி கொண்டிருந்தார்கள் //
என் கண்கள் திறந்து இருந்தது..
எனக்கு நன்றாக நினைவும் இருந்தது..
ஆனால் என்னால் அசைய முடிய வில்லை//
என் பெற்றோரிடம்,
எனக்கு மூளை சாவு என்றனர்//
என கத்தி சொல்ல வேண்டும்
போல இருந்தது......
என்னால் முடியவில்லை//
நான் எவ்வளவோ கத்தியும்
அவர்களுக்கு கேட்கவே இல்லை//
அழுது கொண்டே ,
அவர்களும் போய் விட ....//
மருத்துவர்கள் சூழ்ந்து கொண்டு ,
என்னை கூறு போட்டார்கள் //
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை
அழுவதை தவிர.//